tamilnadu

img

அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சார் நிலை கருவூலப்பணிகளை விப்ரோ நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், அரசு காலிப் பணி இடங்களை நிரப்பாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஊழியர் முறையில் விடுவதை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓசூர் சார்நிலை கருவூலம் முன்பு சங்கத்தின் துணைத் தலைவர் தேவராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டச் செயலாளர் ஜெயராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் திம்ம ராஜ், சிவா, முனிராஜ் மற்றும் பலர்பேசினர்.