சென்னை, ஜூன் 3- ஒடிசா ரயில் விபத்து ஆற்றுப் படுத்த முடியாத துயரம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பகங்கா ரயில் நிலையம் அருகில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் - சரக்கு ரயில் மோதியதில் பெங்களூரு - கொல்கத்தா அதிவிரைவு வண்டி தடம் புரண்ட விபத்தில் இதுவரை 238 பேர் மரணமடைந்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்தக் கோர விபத்து நாட்டை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பயணிகள் அதிகபட்ச உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்பு நடவடிக்கைகளில் ஒடிசா மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டது. தமிழ்நாடு முதலமைச்சர், மாநில அரசின் போக் குவரத்துத்துறை அமைச்சரையும் உயர் அதிகாரிகளையும் மீட்புக் குழுக்கள் மற்றும் மருத்துவக் குழுக்க ளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் அனுப்பி வைத்திருப்பதும், மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான உதவி மையங்கள் அமைத்திருப்பதும், ஒரு நாள் துக்கம் கடைபிடிக்க முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் உட்பட அரசு நிகழ்ச்சி களை ரத்து செய்திருப்பதும் வேத னையில் தவிப்போருக்கு ஆறுதல் அளிக்கும் நல்ல நடவடிக்கையாகும். வரலாறு காணாத படுமோச மான விபத்தில் உயிரிழந்த அனை வருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்வதுடன், ஒன்றிய அரசும், ரயில்வே அமைச்சகமும் விபத்தில்லா பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.