tamilnadu

img

தீட்சிதரை கைது செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், நவ.22- சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் செவிலியர் லதாவை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரம்  சாராட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தீட்சி தர் தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரைப் பிடிக்க 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. செவிலியரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை கைது செய்ய வலியுறுத்தி  தமிழ்நாடு அரசு  சுகாதாரத்துறை அனைத்து பெண் அலுவ லர்கள் சங்கம் சார்பில் சிதம்பரம் காந்தி  சிலை அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சங்கத்தின் மாநில பிரச்சார செயலா ளர் மணிமேகலை, கடலூர் மாவட்டச் செய லாளர் பானுமதி, மாநிலத் தலைவர் அமுத வல்லி, தமிழ்நாடு அரசு அனைத்து கிராம சுகா தார செவிலியர் நலச் சங்க மாநில பொதுச்  செயலாளர் சுமதி, தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.