சென்னை, ஜூன் 9- அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார். கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவரும் நிலையில், இந்தியா விலேயே முதன்முதலாக கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10 (இன்று) ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 8) வெளி யிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவு களை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முற்றிலும் மாறாக, கூடங்குளம் வளா கத்திற்குள்ளேயே சேமித்துவைக்க மத்திய பாஜக அரசு திட்டமிடுவதற்கு கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுதொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சியளிக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவ மதிப்பதாகவும் இருக்கிறது” என்று தெரி வித்திருந்தார். “ராதாபுரம் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் அச்சத்தையும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் உரிய வகை யில் வாய்மொழியாகவும் எழுத்துபூர்வ மாகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டி, கூடங் குளம் அணு உலை வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவு மையம் பணிகளுக்குக் கடும் எதிர்ப்புகளை அழுத்தமாகப் பதிவு செய்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தி யாளர்களைச் சந்தித்தபோது இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த செய்தி மற்றும் விளம்பரத் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவர்களின் கருத்துக்கு ஏற்பவே அணுக்கழிவு மையம் அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.