tamilnadu

img

ஏட்டளவில் மட்டுமே அறிவிப்பு

சென்னை மணலியைச் சுற்றி 3 தரைப்பாலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கும்போது, அப்பகுதி மக்கள் பெரிதும்  அவதியடைந்து வருகின்றனர். புழல் ஏரி நிரம்பும் போது, உபரிநீர் திறந்தி விடுவார்கள். உபரி நீர் வட பெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லை வாயில், எஸ்.ஆர்.எப். பர்மா நகர் இரும்பு பாலம், சடையங்குப்பம் மேம்பாலம், எண்ணூர் வழியாக கடலில் கலக்கிறது. வடபெரும்பாக்கம் தரைப்பாலமும்,  ஆமுல்லைவாயில் தரைப்பாலமும், முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் சாதாரண மழைக்கே இந்த பாலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடுகின்றன. இதனால் ஆண்டார்குப்பம், கண்ணியம்மன்பேட்டை, அரியலூர் பகுதி மக்கள் ஊரை விட்டே வெளியேற முடியாத சூழ் நிலைகள் ஏற்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, 10 நாட்களுக்கு மேல், தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியிருந்தது. அதபோல் 2017 ஆம் ஆண்டு, கனமழை யின் போதும் ஆமுல்லைவாயில் தரைப்பாலத்தை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இறண்டுபேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அதபோல் பர்மா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்றால் பர்மா நகர் இரும்பு பாலம் வழியா கத்தான் செல்ல வேண்டும். மழைக்காலங்களில், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் போது, இரும்பு பாலம் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது.  அப்போது அரசு அதிகாரிகள் இவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்கவைத்து தண்ணீர் வடிந்த பிறகு அவர்கள் பகுதிக்கு செல்கின்றனர். எனவே இப்பகுதி மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கா வண்ணம் புதிய பாலங்கள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் நடைபெற்ற  மானியக் கோரிக்கையின் போது மணலி பகுதியில், புழல் உபரி நீர் வடிகால்வாய்க ளின் குறுக்கே, ஆமுல்லைவாயில், வடபெரும்பாக்கம், பர்மா நகர் ஆகிய இடங்களில், ரூ. 44.25 கோடியில் புதிதாக பாலங்கள் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் ‘ஏட்டில்  சர்க்கரை’ என்று எழுதினால் இனிக்குமா? என்பதுபோல,  பாலம் கட்டுவதற்கான அறிவிப்பும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. ந.நி