“தமிழக முதலமைச்சரை, செயல்பட விடாமல் நிதி ஆதாரத்தை (ஒன்றிய பாஜக அரசு) முடக்கிவிட நினைக்கிறார்கள். ஜனநாயகத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கக் கூடாது. நமக்கான உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கும்போது, நாம் வாளாவிருக்க முடியாது. ஆகையால், நமக்கான உரிமைகளைப் பெற்றிட வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு இனியும் வரக்கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஓட்டு கூட மோடிக்குப் போடக்கூடாது” என்று அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியுள்ளார்.