ஒடிசாவில் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு
ஒடிசாவில் புவனேஸ்வர் மக்கள வைக்கும் 7 சட்டசபை தொகுதிகளுக்கு மான வேட்பாளர்களை சிபிஎம் அறி வித்துள்ளது.
புவனேஸ்வர் மக்களவைத் தொகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுரேஷ் சந்திர பாணி கிரஹி அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை வெற்றிச் செங்கொடி ஏற்றிய தொகுதி இது. 1977, 1989 மற்றும் 1991 தேர்தல்களில், சிபிஎம்-இன் சிவாஜி பட்நாயக் புவனேஸ்வரில் இருந்து மக்க ளவைக்கு வெற்றி பெற்றார். மக்களவை யுடன் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கட்சியின் மாநில செயலாளர் அலி கிஷோர் பட்நாயக் அறிவித்தார்.
சிட்டமன்றத் தொகுதிகளும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் தனித் தொகுதியான போனாய்-இல் லக்ஷ்மன் முண்டா போட்டியிடுவார், பாலசோர் மாவட்டம் நீல்கிரி தொகுதியில் யோகானந்த தாஸ், நாயகர் மாவட்டம் ரன்பூர் தொகுதியில் சரோஜ் நாயக், குர்தா மாவட்டத்தில் உள்ள குர்தா தொகுதியில் கிரிஷ் மஹாராணா, கட்டாக் மாவட்டம் சலேபூர் தொகுதியில் பத்ரி நாராயண் தாஸ், மயூர்பஞ்ச் மாவட்டம் மொராடா தொகுதியில் மயுதஞ்சய பெஹெரா, மல்கங்கிரி மாவட்டத்தில் பழங்குடி யினர் தனித் தொகுதியான சித்ரகொண்டா வில் ரகுநாத் ஹண்டல் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பாஜகவை தோற்கடிப்பதே முக்கிய குறிக்கோள் என்று செய்தியாளர்களிடம் கிஷோர் பட்நாயக் கூறினார். மேலும், 24 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சி யில் ஒடிசாவில் எந்த முன்னேற்றமும் இல்லை. வேலையில்லா திண்டாட்ட மும் அதன் தொடர்ச்சியாக பிற மாநிலங் களுக்கு இடம்பெயர்வது அதிகரித்து வரு கிறது. பாஜகவின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் பிஜேடி (பிஜு ஜனதா தளம்) அரசு ஆதர வளித்து வருகிறது என்றார். செய்தி யாளர் சந்திப்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜனார்தன் பதி, சந்தோஷ் தாஸ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
6 மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. இந்த தொகுதிக்கு ஒரே கட்டமாக வெள்ளி யன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. நாகாலாந்தின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏழு நாகா பழங்குடியினரை பிரதிநிதித்துவப் படுத்தும் இஎன்பிஓ அமைப்பு, தனி தன்னாட்சி நிர்வாகம் அல்லது அங்குள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என வலி யுறுத்தி வருகிறது. தங்கள் கோரிக்கை நிறைவேறாதவரை தேர்தலில் பங்கேற்க போவதில்லை என 3 வாரங்களுக்கு முன் அறிவித்து இருந்தது. அதன்படி கிழக்குப் பகுதிகளில் உள்ள 6 மாவட்ட மக்களும் வெள்ளியன்று தேர்தல் புறக் கணிப்பில் ஈடுபட்டனர். 16 மாவட்டங் களை கொண்ட நாகாலாந்தில் இஎன்பிஓ அமைப்பின் போராட்டத்தால் 6 மாவட்டங்களில் தேர்தல் புறக் கணிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை நோட்டீஸ்
வெள்ளியன்று மதியம் வரை ஒரு வாக்கு கூட பதிவாகததால் தேர்தல் நட வடிக்கையை சீர்குலைத்ததற்காக நாகா லாந்து தலைமை தேர்தல் அதிகாரி இஎன்பிஓ அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,“ கிழக்கு நாகா லாந்து பகுதிகளில் வசிப்பவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் சுதந்திரத்தில் தலையிட்டுள்ளீர்கள். எனவே இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 சி உட்பிரிவின் கீழ் ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.