tamilnadu

img

வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு நேரில்ஆய்வு

வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள்
அமைச்சர் சேகர்பாபு நேரில்ஆய்வு


வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.பணிகளை துரிதபடுத்தி அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலு வலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தி னார். தமிழ்நாடு முதல மைச்சர் வழிகாட்டுதலின்படி செவ்வாயன்று (மார்ச் 4) சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம், 700 புதிய குடியிருப்புகள், புதிய சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டுத் திடல் மேம்படுத்துதல் பணி களை பார்வையிட்டார். பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் கட்டப்பட்டு வரும் 776 புதிய குடியிருப்புகள் மற்றும் ஜார்ஜ் டவுன், பிராட்வே சாலை, பி.ஆர்.என் கார்டனில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடி யிருப்புப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.