tamilnadu

தமிழக அரசின் நிவாரண அறிவிப்பு

மிக்ஜம் புயல் பாதிப்புக்கான, தமிழ்நாடு அரசின் நிவாரண அறிவிப்பை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

‘மிக்ஜம்’ புயலால் சென்னை  உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை யால் மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாயினர். ஏறத்தாழ ஒருவார காலம் ஆன பிறகும் இன்னமும் பல பகுதிகளில் இயல்புநிலை திரும்பவில்லை. 

பல்லாயிரக்கணக்கான ஏக்க ரில் கதிர் வரும் நிலையிலிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவ சாயிகள் செய்வதறியாது திகைத்து  நின்றனர். இந்த நிலையில், பாதிக் கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும்  வகையில் தமிழ்நாடு அரசு நிவா ரணம் குறித்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வரவேற்கிறது. 

கடுமையான நிதி நெருக்கடிக்கு  மத்தியில் கடந்த காலத்தில் வழங் கப்பட்ட நிவாரணத்தொகை அனை த்து இனங்களிலும் உயர்த்தப்பட்டி ருப்பது வரவேற்கத்தக்க நடவ டிக்கையாகும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்துப் பயிர்களுக்கும் நிவாரணம் கிடைப்  பதை அரசு உறுதி செய்ய வேண்  டும். 

‘மிக்ஜம்’ புயலால் வாழ்வாதா ரம் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6 ஆயிரம் வழங்கிடவும், புயல் வெள்ளத்தினால் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை யாக ரூ. 5 லட்சம் வழங்கிடவும், சேத மடைந்த குடிசைகளுக்கு ரூ. 8  ஆயிரம் வழங்கிடவும், மழையி னால் 33 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் உள்  ளிட்ட இறவைப் பாசனப்பயிர் களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.  17 ஆயிரம் வழங்கிடவும், 33 சத விகிதத்திற்கு மேல் சேதமடைந்த மரப்பயிர்கள் - பல்லாண்டு பயிர்  களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 22 ஆயிரத்து 500 வழங்கிடவும், 33 சதவிகிதத்திற்கு மேல் பாதிக் கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8500 வழங்கிடவும், அதேபோல் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரி ழப்பிற்கு நிவாரணமாக ரூ. 37 ஆயி ரத்து 500 வழங்கிடவும், வெள்ளாடு  - செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவா ரணமாக ரூ. 4000 வழங்கிடவும் தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

இந்த நிலையில், ஒன்றிய பாஜக  அரசு புயல் நிவாரணப் பணி களுக்காக தமிழ்நாடு அரசு கோரி யுள்ள தொகையை முழுமையாக வும், தாமதமில்லாமலும் வழங்க  முன்வரவேண்டுமென்று தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் கோருகிறது.