tamilnadu

நிபா வைரஸ் பாதிப்பு: எல்லையில் பரிசோதனை

சென்னை, ஜூன் 5-கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனியில் சுகாதாரத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியிலுள்ள கலமச்சேரி மருத்துவமனையில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையையொட்டி உள்ள, தேனி மாவட்டம் போடிமெட்டில் சுகாதாரத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.இந்த முகாமில் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் வருவோருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது. அவ்வாறு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டால், அவர்களை போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.