சூதாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை ஓசூர் காவல் துறையினர் கைது செய்து, அவர்களி டம் இருந்து 1,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
முடிவு எடுக்கவில்லை
தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது தொடர்பாக அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
1,000 படுக்கைகள் தயார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரி வித்துள்ளார்.
குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிபி.எஸ்.இ. பாட திட்டத்தில் திட்டமிட்டே மத சார்பின்மை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை மத்திய அரசு நீக்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி குற்றம் சாட்டி யுள்ளார்.
வீடு இடிந்து பெண் பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புரு ஷோத்தமகுப்பம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அண்ணியம்மாள் வசித்துவந்தார். வியாழக்கிழமை இரவு பெய்த கன மழையால் அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.