சென்னை: 1415 பேருக்கு தொற்று
சென்னையில் 1415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31890ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 881 பேர் குணமடைந்துள்ளனர். 347 பேர் இறந்துள்ளர். 14 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: 38 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 38 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 408 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 10 பேருக்கு மேல் உயிரிழந்து உள்ளனர். 297 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்: 81 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை 1865ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 855 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்தனர். 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு: 178 பேருக்கு கொரோனா தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2882ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1255 பேர் குண
மடைந்த நிலையில், 24 பேர் இறந்தனர். 1602 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
செவிலியர் உயிரிழப்பு
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது செவிலியர் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உதவி ஆணையர், ஆய்வாளருக்கு கொரோனா
சென்னை உயர்நீதிமன்ற சரக காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் காவல் நிலைய ஆய்வாளர், அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 4 காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னிசியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
15 பேர் உயிரிழப்பு
சென்னையில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூரை சேர்ந்த 42 வயது பெண் உள்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்தனர்.
155 செவிலியர்களுக்கு கொரோனா
சென்னையில் கடந்த 2 மாதங்களில் 155 செவிலியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 செவிலியர்களும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 45 செவிலியர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 30 செவிலியர்களும், கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 15 செவிலியர்களும், கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் 5 செவிலியர்களும், தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையில் 6 செவிலியர்களும், ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம்-ல் 4 செவிலியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 135 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டனர். 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பெரியம்மாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி வைக்கக் கூடாது என பெரியமாம்பட்டு பகுதி பொதுமக்கள் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை விபத்து
ஓசூர் முனீஸ்வர் நகரைச் சேர்ந்த ரிஜோ சாமுவேல் (25) மோட்டார் பைக்கில் ஓசூர் ஜூஜூவாடி
விநாயகர் நகர் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாகச் சென்ற லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் 193ஆக உயர்வு
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள
தால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது.