tamilnadu

img

குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய குடிநீர் இணைப்பு பணி தொடக்கம்

குடிநீர் பற்றாக்குறையை போக்க  புதிய குடிநீர் இணைப்பு பணி தொடக்கம்

சென்னை, மே 19- திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது.  இதனால் குடிநீர் வடிகால் வாரியம் நெய்தல் நகரில் உள்ள உயர்மட்ட தொட்டி யில் இருந்து தனியாக ஒரு இணைப்பு எர்ணாவூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அதில் இருந்து எர்ணாவூர் பகுதியில் உள்ள காமராஜ் நகர், காந்தி நகர், கன்னி யலால் லேஅவுட், கிரிஜா நகர், பிருந்தா வன் நகர் மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வகையில் குழாய் மூலம் இணைக்கும் பணி தொடங்கியது. மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் அந்த பணியை துவக்கி வைத்தார். இதில் பகுதி பொறியாளர் வேணு கோபால், காமராஜ் நகர் பொருளாளர் கார்த்திக், கிரிஜா நகர் தலைவர் சுப்பிர மணி, பிருந்தாவன் நகர் தலைவர் ஆறு முகம், கன்னியலால் லே  அவுட் தலைவர் சடகோபன், மகாலட்சுமி நகர் தலைவர் கதிர்வேல், விபிநகர் ஆலோசகர் ஆர்.கருணாநிதி, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பி னர் வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.