சென்னை, ஆக. 11- சென்னையில் பயணிகளின் வசதிக் காக 6 பெட்டிகள் கொண்ட 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கி மலை முதல் சென்னை சென்ட்ரல் வரை மொத்தம் 54 கி.மீ. தூரத்திற்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.
பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவ தால், மெட்ரோ ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற தொடர்ந்து எழுந்தது. இதையடுத்து இரண்டு வழித்தடங்க ளிலும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணி க்கையை 4இல் இருந்து 6ஆக உயர்த்த வும், இதற்காக 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்தாண்டு கருத்துரு அனுப்பியது. இந்த கருத்துருக்கு தமிழ்நாடு அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து கூடுதலாக தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூ. 2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இந்த கருத்துருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதை சாத்தியப்படுத்த சர்வதேச வங்கிகளி டமிருந்து கடன் உதவி பெற்று மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.