சென்னை,ஜூலை 7- நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக் கும் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து சட்டப் பேரவையில் விளக்கம் அளிக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆதிதிராவிட மக்களுக்காக குரல் கொடுத்த இரட்டைமலை சீனிவாசனின் 160 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை கிண்டி யிலுள்ள அவரது நினைவு மண்டபத்தில், அமைச் சர்கள் டி. ஜெயக்குமார், சரோஜா, பெஞ்சமின் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச் சர் ஜெயக்குமாரிடம் நீட் மசோதா நிராகரிக்கப் பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சட்டப்பேரவை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது இதுபற்றி பேசுவது மரபல்ல என்றும், தன்னை ஏன் வறுத்தெடுக்கிறீர்கள் என்றும் தெரிவித்தார்.