சென்னை, நவ.20- இணையவழியில் நில அளவைக்கு விண்ணப் பிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அள வீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப் பிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி, பொதுமக்களின் வசதிக்காக ‘எந்நேரத்திலும் எவ்விடத் திலிருந்தும்’ நில அளவை செய்ய https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் திங்களன்று (நவ.20) தொடங்கி வைத்தார்.
இப்புதிய சேவையின் மூலம், பொதுமக்கள் நில அளவை செய்ய விண்ணப் பிக்கும் பொருட்டு வட்டாட்சி யர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொதுமக்கள் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணைய வழி யில் செலுத்தி விண்ணப் பிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.
நில அளவை செய்யப் படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரி விக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப் பமிட்ட ‘அறிக்கை/வரை படம்’ ஆகியவற்றை மனு தாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணைய வழிச் சேவையின் மூலம் பதி விறக்கம் செய்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.