tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்

திண்டுக்கல், ஜூலை 1- பாஜக கொண்டு வந்த நியாய சன்கிதா உள்ளிட்ட மூன்று சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு  அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம்  சார்பாக உண்ணாவிரதம் நடை பெற்றது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய ஜனதா கட்சிகடந்த நாடா ளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்களை எல்லாம் நீக்கிவிட்டு பாரதிய  நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய  நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன் எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் (பிஎஸ்ஏ) ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை எந்த வாக்கெடுப்பும் இல்லா மல் விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி யது. இந்த மூன்று சட்டங்களும் திங்கட் கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் இந்த சட்டத்தை  திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு , பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்தக் கூடாது என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பாக. அனைத்து வழக்கறிஞர் சங்கம் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி ஆகி யோர் தலைமை தாங்கினர். 

இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன் கூறுகையில் உண்ணாவிரத போராட்டத்திலும் நாளை  (செவ்வாய்க்கிழமை) அனைத்து நீதி மன்றங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் நாளை மறுநாள்(புதன் கிழமை) மத்திய அரசுஅலுவலகங்களில் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட போவதாகவும் மேலும் வரும் 8 தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு பணியில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.

மதுரை

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து வழக்கறிஞர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் கூட்டுக்குழு “ஜாக் கூட்டமைப்பு” முடி வின்படி திங்களன்று மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மதுரை மாவட்ட  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற் றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். போராட்டத்துக்கு நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

இந்தநிலையில் இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவை சேர்ந்த சில வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளா கத்திற்குள் கூச்சலிட்டர்கள் .இதனை நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வழக்க றிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. வழக்க றிஞர்கள் கருப்பு சட்டையை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். 

உண்ணாவிரத போராட்டம் சங்க தலைவர் த.கதிரேசன் தலைமையிலும், சங்க செயலாளர் வ.ஜெயராஜ் முன்னி லையிலும் நடைபெற்றது. சங்க பொரு ளாளர் க.சதீஸ்குமார் தொடக்கவுரை ஆற்றினார். மூத்த வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின ரான அழகிரிசாமி, மூத்த வழக்கறி ஞர்கள் வைகுண்டம் உள்ளிட்ட 150 ஆம் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள். 

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே அர்ஜுனன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான இராமசாமி, அதிமுக சார்பாக முன்னாள்  மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் முத்துபாண்டியன், நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன், வழக்கறிஞர் பாலன், புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கோ.ராமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஒன்றிய செயலாளர் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

தேனி

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்  டத்திற்கு தலைவர் ஏ சி சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார் . செய லாளர் எஸ் செல்வகுமார், துணைத் தலை வர் எஸ்.டி.பாலமுருகன் ஆகியோர் முன்  னிலை வகித்தனர் .மூத்த வழக்கறிஞர் பெரியகருப்பன், பி.எஸ்.கணேசன், பொருளாளர் ஆறுமுகம், துணைச் செய லாளர்கள் மகாலிங்கம், அழகேந்திரன், மற்றும் திரளாக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.