3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில், 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை புரிந்து கொள்வதில் மட்டுமல்ல, உச்சரிக்கவும் முடியவில்லை என காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.