tamilnadu

img

விதொச  புதிய கிளை உதயம்

விதொச  புதிய கிளை உதயம்

காஞ்சிபுரம், மே 13- திருப்பெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட சுங்கு வார்சத்திரம் பகுதியில் பல்ல காந்தூரில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் ஞாயிறன்று (மே.11) வி.முனியம்மாள் தலை மையில் நடை பெற்றது. நூறு நாள் வேலை வழங்க வேண்டும்,  காந்தூர் பகுதி மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும்,  பல காலமாக குடியிருக்கும் 20 குடும்பங்களுக்கு வீட்டு மனையுடன் குடிமனை பட்டா வழங்க வேண்டும், காந்தூரில் வாழ்ந்து வரும் தலித் மக்கள் குடி யிருப்பில் மழைநீர் வெளி யேற கால்வாயை தூர்வாரி வடிகால் அமைத்துத்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் விதொச காஞ்சிபுரம் மாவட்ட  அமைப்பாளர் சி.சங்கர், சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுகுந்தன், கிளைச்செயலா ளர் சி.அன்பழகன், ஆர்.வினோத்குமார், என்.சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்ட னர். நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஆர்.விஜயா, செயலாளராக வி.முனியம்மாள், பொரு ளாளராக எ.திவ்யா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.