tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு

கடலூர், மே 4- கடலூர் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு தேர்வு நடைபெற்றது. இதில் 4560 மாணவர்கள் எழுதினர். கடலூர், திருப்பா திரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி அரசு மேல்நிலைப்  பள்ளி, குறிஞ்சிப்பாடி எஸ்.கே. வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி என்.எல்.சி. கேந்திரிய வித்யாலயா பள்ளி, பண்ருட்டி பணிக்கன்குப்பம் என்ஜி னீயரிங் கல்லூரி, நெய்வேலி வட்டம்-10 என். எல்.சி. ஆண்கள் மேல்  நிலைப் பள்ளி, நெய்வேலி வட்டம்-11 என்எல்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளி, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி ஆகிய 8 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 4560 மாணவர் கள்  எழுதினார்கள். நீட் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் கடும் சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஞாயிறன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. மூன்று கட்ட சோதனைகள் நடைபெற்றது. முதற்கட்ட மாக காவல்துறையினர் அவர்களுடைய அடையாள அட்டைகளை பரிசோதித்து உள்ளே அனுமதித்தனர். இரண்டாம் கட்டமாக சீருடை இல்லாத காவ லர்கள் மாணவர்களை தனி யாகவும், மாணவிகளை பெண் காவலர்கள் தனி யாகவும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மூன்றாவதாக பயோ மெட்ரிக் சோதனை நடை பெற்றது. அதன் பிறகு மாணவ மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.