tamilnadu

நீட் தேர்வு முறைகேடு குறித்து புலன் விசாரணை வேண்டும்! ஜூன் 22-இல் சிபிஎம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூன் 12 - நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் - முறைகேடுகள் குறித்து, புலன்  விசாரணை நடத்த வேண்டும் என்று ஒன் றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இக்கோரிக்கையை முன்வைத்து, ஜூன் 22 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு தொடங்கிய காலம் தொட்டு நீட் தேர்வில் பல்வேறு குளறு படிகளும், முறைகேடுகளும் நடை பெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு குளறுபடிகள் உச்சத்திற்கு சென்றுள்ளன.  நாடு முழுவதும் மாணவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்ற னர். உச்சநீதிமன்றமும் நீட் தேர்வின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக சாடியிருக் கிறது.

இந்த நிலையில் மாணவர்களின் தன்னம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான மருத்துவத் துறை யில் இத்தகைய குளறுபடிகள் தொடர்வது மருத்துவத் துறையையும், மக்கள் நல்வாழ்வையும் சீரழிக்கும். எனவே, 1. இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு மாநில அரசே நடத்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்திட வேண்டும்; 2. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; 3. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தரமாக விலக்களித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ கம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஜூன் 22-ஆம் தேதியன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பொது மக்களும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும், மாண வர்களும், பெற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.