tamilnadu

பூந்தமல்லி அருகே 1 டன் குட்கா பறிமுதல்

அம்பத்தூர், ஜூன் 12- பூந்தமல்லி அருகே வாக னத்தில் எடுத்து செல்லப் பட்ட ஒரு டன் குட்கா பறி முதல் செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை பகுதியில் பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தே கத்திற்கு இடமாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி னர். காவல் துறையினரைக் கண்டதும் ஓட்டுநர் நிற்கா மல் வேகமாக சென்றுள் ளார். 

இதையடுத்து காவல் துறையினர் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனர். அந்த வாகன மாம் நசரத்பேட்டை சிக்ன லில் நின்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களில் மோதியபடி நின்றது. காவல் துறையினர் பின்தொடர்ந்து வருவதை அறிந்த ஓட்டுநர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து வாக னத்தை திறந்து பார்த்த போது அதில் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.