tamilnadu

பாஜக அரசுக்கு ஆதரவாக என்சிபி

சென்னை, மார்ச் 10- வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வரிசையாகக் களமிறக்கி விட்ட பாஜக அரசு, தமிழகத்தில் திமுக அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பை (என்சிபி) களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார்.

சென்னையில் திமுக எம்பி பி.வில்சனுடன் இணைந்து ஞாயிறன்று (மார்ச் 10) செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது கூறியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு பொறுப பேற்றதும் போதைப்பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கை களை நீதிமன்றமும் பாராட்டி இருக்கிறது, எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனால் திமுகவை என்சிபி -ஐ வைத்து மிரட்டிப் பார்க்க லாம் என்று எண்ணிப் பார்க்கி றார்கள். என்சிபி விசாரணை அமைப்பி னுடைய துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் புலன் விசாரணை முழுமையாக நடைபெறாமலேயே டில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

விசாரணை முழுமையாக முடிந்த பிறகு சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே திமுகவைக் கொச்சைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதன் மூல மாக ஏதாவது அரசியல் ஆதா யம் அடைய முடியுமா? என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார் கள். அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்களே துணையாக இருந்தது என்பது நாடறிந்த உண்மை. நீதிமன்றத்தில் நாங்கள் போராடி அந்த அமைச்சர் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நட வடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம்.

இதற்கெல்லாம் ஆட்சியாளர்களே துணையாக இருந்தார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஒரு பேப்பர் எடுக்கப்பட்டது, அதில் 85 கோடி ரூபாய் எந்தெந்த அமைச்சர்களுக்குத் தரப்பட்டன என்ற விவரங்கள் இருக்கிறது.அதில் வருமானவரித் துறையோ, அமலாக்கத் துறையோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. 2013-ஆம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு வந்தது, அன்றைக்கு அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ஒழுங்காக அந்த வழக்கையும் நடத்தவில்லை.

அன்றைக்கு ஜாபர் சாதிக்குக்காக வழக்கினை நடத்தியவர் பாஜக வினுடைய வழக்கறிஞர் பிரிவு தலை வர் பால் கனகராஜ். ஜாபர் சாதிக்கைக் காப்பாற்றியது அதிமுக ஆட்சியிலேதான் நடந்தது. திமுகவில் இரண்டு கோடி பேருக்கு மேல் உறுப்பி னர்களாக இருக்கிறார்கள். வருகின்ற வர்களை எல்லாம் சோதித்துப் பார்த்துக் கட்சியில் சேர்க்க முடியாது, ஜாபர் சாதிக் போன்றவர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருக்கிறார்கள். போதைப்பொருள் நட மாட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்திருப்பது குஜராத்தின் முந்த்ரா துறைமுகம்தான்.

அந்தத் துறைமுகத்திலிருந்துதான் 21,000 கிலோ போதைப் பொருள் கடத்தப் பட்டுள்ளது, 9,000 கிலோ போதைப் பொருளும் கடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்தும் கடத்தப் பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில்தான் அதிகமான வழக்குகள் போடப்பட்டி ருக்கின்றன. தேர்தல் வருகின்றபோது ஏதாவது பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்தி விட முடியாதா? என்று பகல்கனவு கண்டு கொண்டி ருக்கிறது.

டெல்லியிலும், வேறு மாநி லத்திலும்தான் போதைப்பொருள் பிடிக்கப்பட்டு இருக்கிறது, தமிழ கத்தில் கிடையாது. தமிழகத்தைப் பொருத்த அளவில் போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாகத் தடுத்து வைத்திருக்கிறோம்.  தமிழகத்தைப் போன்ற வளர்ச்சியை எங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை? என மத்திய பாஜகவை நோக்கி வட இந்திய மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். போதைப் பொருள் மாநிலம் போல தமிழகத்தை சித்தரித்தால்தான், தமிழ கத்தின் வளர்ச்சி வட இந்தியாவில் பேசுபொருளாகாது என்பதற்காகவே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள்.

பாஜகவில் இருக்கக்கூடிய பலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களெல்லாம் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாக மாறி விட்டார்கள். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. பி.வில்சன் எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லா மல் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்" என்று கூறினார்.