கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாமை கல்லூரி செயலாளர் ராஜீ துவக்கி வைத்தார். முகாம் நடைபெறவுள்ள 7 நாட்களுக்கான பணிகளை திட்ட அலுவலர் பார்த்திபன் பட்டியலிட்டார். இதில் கல்லூரி முதல்வர் அருள், கோணப்பட்டி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன், ஆசிரியர் ரவிசங்கர் , கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், புதூர் புங்கனை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்தி தங்கவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தா பழனி, ஊர் தலைவர் ராமஜெயம், திட்ட அலுவலர்கள் திருமுருகன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.