tamilnadu

img

தமிழகத்தின் நிலைபாட்டுக்கு நாடெங்கும் பெருகும் ஆதரவு!

சென்னை, ஜூன் 28 - நீட் தேர்விலிருந்து தமிழகத்தி ற்கு விலக்கு கோரும், அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாடு சட்டப் பேரவை யில் முதலைமைச்சர் மு.க. ஸ்டா லின் பேசியதாவது:

சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்த கல்விமுறை

மருத்துவத் துறையிலும், பல் வேறு பொது சுகாதாரக் குறியீடுகளி லும் நாட்டிற்கே முன்னோடியாக நம்முடைய தமிழ்நாடு திகழ்கிறது. பல ஆண்டுகளாக நமது தமிழ் நாட்டில் பின்பற்றப்பட்ட சிறப்பான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறை தான் இந்தச் சாத னைகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்து ரைகளின் அடிப்படையில் மருத்து வம் உள்ளிட்ட அனைத்துத் தொழி ற்பட்டப் படிப்புகளுக்கான நுழை வுத் தேர்வை ரத்து செய்து இந்தச் சாதனைகளுக்கு அடித்தளம் அமைத்தவர் கலைஞர்.

அனைத்துப் பகுதிகளில் கிடைக்கும் சிறப்பான மருத்துவ சேவை! 

பள்ளிக்கல்வி மதிப்பெண் களின் அடிப்படையில், சமூக நீதி யையும், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பை யும் உறுதி செய்யக்கூடிய முன் னோடிச் சேர்க்கை முறையை நாம் பின்பற்றி வருகிறோம். இந்த முறை யால்தான் தமிழ்நாட்டின் அனைத் துப் பகுதிகளில் இருந்தும் மருத்து வர்கள் உருவாகவும், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பான மருத் துவ சேவைகளை வழங்கிடவும் முடிந்தது.

2017 முதல் எட்டாக்கனியாக மாறிய மருத்துவப் படிப்பு!

ஆனால் 2017-ஆம் ஆண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை ஒன்றிய அரசு கட்டாய மாக்கிய பின்பு, இந்த நிலை முற்றி லும் மாறி, மருத்துவப் படிப்பு  என்பது ஏழை - எளிய மாணவர் களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாத கிராமப்புற, ஏழை யெளிய மாணவர்களால் இந்தத் தேர்வில் வெல்ல இயலாது. அது மட்டுமல்ல; கிராமப்புறப் பகுதி களிலும் பின்தங்கிய பகுதிகளி லும் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளிலும் எதிர்காலத்தில் இந்த நீட் தேர்வு முறை பாதிக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே, அதனை அர சியல் ரீதியாகவும், சட்ட ரீதியாக வும் தொடர்ந்து எதிர்த்து வரு கிறோம். திமுக சார்பில் மட்டுமல்ல; கழக இளைஞரணி சார்பிலும் பல் வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டன. குறிப்பாக, மாணவர் அணி யையும், மருத்துவர் அணியையும் ஒருங்கிணைத்து, “நீட் விலக்கு-நம் இலக்கு” என்ற மாபெரும் கை யெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இவற்றையெல்லாம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி தன்னுடைய பரிந்துரையில் விரி வாக எடுத்துச் சொல்லியிருந்தார்.

2021 முதல் தொடரும்  சட்டப் போராட்டம்! 

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ் நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என  அனைவரிடமும் அசைக்க முடி யாத கருத்தொற்றுமை நிலவி வரு கிறது. இதனடிப்படையில், ஓய்வு பெற்ற நீதியரசர்  ஏ.கே. இராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரை யின் அடிப்படையில், இந்தச் சட்ட மன்றப் பேரவையில் 13.09.2021 அன்று தமிழ்நாடு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் - 2021 என்ற சட்டமுன் வடிவு ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. ஆனால், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகும் ஆளு நரால் அதற்கான ஒப்புதல் வழங்கப்படாமல், மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், என் தலைமை யில் 5.2.2022 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, இந்தச் சட்ட முன்வடிவினை மீண்டும் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அறி முகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்ற ப்பட்டு, 8.2.2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு ஆளுநரால் அனுப் பப்பட்டு, இதுகுறித்து ஒன்றிய அரசால் கோரப்பட்ட அனைத்து  விளக்கங்களையும், தமிழ்நாடு அரசு உடனுக்குடன்  வழங்கியுள்ள நிலையிலும், இதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

மாணவர்களின் நம்பிக்கையை தகர்த்த நீட் தேர்வு!

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகளின் மீது நமது  மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையையே நிலைகுலையச் செய்துள்ளன. 

இதுவரை இருந்திராத அள விற்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண்  பெற்றது; தேர்வுகள் காலதாமத மாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறை யில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது; இதற்கு எதிர்ப்பு கள் கிளம்பியதால், இந்தக் கரு ணை மதிப்பெண்கள் ரத்து செய்யப் பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டது; பல் வேறு தேர்வு மையங்களில் தேர்வு க்கு முன்னரே வினாத்தாள் வெளி யானது; தேர்வு மையத்தில், தேர்வுக் கண்காணிப்பாளரே விடைத்தாள்களை நிரப்பிய ஊழல்  என பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன. பல ஆண்டுகாலம் உழைத்து, பெரும் தொகையைச் செலவழித்து, இந்தப் போட்டித் தேர்வுக்குத் தயாரான மாணவர் களையும் அவர்களின் குடும்பங் களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளன.

தேர்வு முறைகேடு:  நீதிமன்றம் குட்டு!

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து, தவறே நடை பெறவில்லை என்று கூறிய ஒன்றிய அரசு,  உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அமைப்பின் தலைவரை மாற்றியுள் ளது. தேர்வு முறைகேடுகள் குறி த்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு பெருகி வரும் ஆதரவு!

பல ஆண்டு காலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தனியே போர் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவல நிலையை உணர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிரான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தி யாவின் குரலாக நாடு முழுவதும் எதிரொலிப்பதை அண்மை நிகழ்வு கள் காட்டுகின்றன.

‘மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளே முடிவெடுக்கும் பழைய நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும்’ என மேற்கு வங்க முத லமைச்சர் மம்தா பானர்ஜி, பிரத மருக்கே கடிதம் எழுதியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எனப் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நாம் எடுத்த முயற்சிகளை வெற்றியடையச் செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற் றிடவும் தேவையான முன்னெடுப் பாக, இந்த தீர்மானத்தை நிறை வேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.