tamilnadu

கிண்டியில் தேசிய மூத்த குடிமக்கள் நல மையம்

சென்னை,பிப்.25-  சென்னை, கிண்டியில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஞாயிறன்று (பிப். 25)  திறந்து வைத்தார்.  தேசிய முதியோர் நல மையங்கள் இந்தியாவில் 2 இடங்களில் அமையும் என்று 2014-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது.  அந்த வகையில், தமிழ்நாடு அரசு 9 ஏக்கர் நிலத்தினை தந்து, தேசிய முதியோர் நல மையம் அமைவதற்கு காரணமாக இருந்தது.

இந்த மையம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இப்போதுதான் திறந்து வைக்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் அதற்கான சிகிச்சை மையமாக இருந்தது.  ஏற்கெனவே தில்லியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு தளத்தில், முதி யோருக்கான மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. ஆனால், பிரத்யேக மாக ஒரு மூத்தோருக்கான மருத்துவ மனை என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

அதோடு தமிழ்நாட்டில் கட்டப்பட விருக்கின்ற 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்ட டங்கள் உளுந்தூர்பேட்டை, அரக்கோணம், ஓட்டேரி, சிவகாசி, திரு வண்ணாமலை ஆகிய இடங்களில் கட்டப்படவிருக்கிற அவசர சிகிச்சை பிரிவு ஒவ்வொன்றும் ரூ.23.75 கோடி செலவில் கட்டப்பட உள்ளன. அக்கட்டிடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அக்கட்டிடங்கள் 60 விழுக்காடு ஒன்றிய அரசின் நிதி ஆதாரம், 40 விழுக்காடு தமிழ்நாடு அரசின் நிதி ஆதார மாகவும் செயல்படுத்தப்பட உள்ளது. அதே போல், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, நீலகிரி மாவட்டம் குன்னூர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, ஆகிய பகுதிகளில் தலா ரூ.1.75 கோடி மதிப்பீடுகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டும் பணிகளுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

மேலும், 60 விழுக்காடு ஒன்றிய அரசின் நிதி ஆதாரம் மற்றும் 40 விழுக்காடு தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரமாகவும் கொண்டு கட்டப்பட உள்ளது. காசநோய் கூட்டு ஆராய்ச்சி மையம் ரூ.25 கோடியில் கட்டப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, சென்னை ஆவடியில் ஆய்வக வசதி களுடன் கூடிய நலவாழ்வு மையம் ரூ.7.08 கோடி செலவில் கட்டப்பட்டி ருக்கிறது.