tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலையில் தேசிய கருத்தரங்க

சிதம்பரம்,ஏப்.30-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்மை துறை சார்பில் ‘நிலையான வேளாண்மை, கிராமப்புற வாழ் வாதரங்கள்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஆதிகுரு தொடங்கி வைத்தார். முதல்வர் தாணுநாதன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு நாட்டின் அனைத்து துறைகளிலும் மாணவ அமைப்புகளை பலப்படுத்தி சிறந்த தலைமை மற்றும் ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்றார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமூக அறிவியல்துறை தலைவர் கார்த்திகேயன், தேசிய தலைவர் வினோத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிலையான வேளாண்மை மற்றும் கிராமபுற வாழ்வதாரங்கள் என்ற தலைப்பில் புத்தகமும் வெளியிட்டனர். மாணவ பிரதிநிதி ரஞ்சித் நன்றி கூறனார்.