சென்னை, ஆக. 31 - சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறு வனம் நடத்தி வந்தவர் தேவநா தன். நடந்து முடிந்து மக்க ளவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் ஆவார்.
இவர், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டா ளர்களிடம் ரூ. 24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரு டன், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிதி நிறுவ னத்தின் உரிமையாளரான தேவ நாதனுக்கு சொந்தமான அலுவல கத்தில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் சனிக்கிழமை யன்று (ஆக.31) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 3 கிலோ தங்கம் மற்றும் அளவுக்கதிக மான வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள தாக கூறப்படுகிறது.
தேவநாதனை நேரடி யாக, அவரது அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவரது லாக்கர் உள்ளிட்டவற்றை திறந்து சோதனை மேற்கொண்ட தாகவும், இந்த சோதனையில் தான் 3 கிலோ தங்கம், 35 கிலோ வெள்ளிப் பொருட்கள், நிலம் தொடர்பான 15 ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.