tamilnadu

img

பொதுமக்கள் உலர் கழிவுகளை விற்க மாநகராட்சி இணையதளம் தொடக்கம்

சென்னை, டிச. 13- பெருநகர சென்னை மாநக ராட்சி திடக்கழிவு மேலாண் மைத் துறையின் சார்பில் தின மும் சேகரமாகும் திடக்கழிவு களிலிருந்து பெறப்படும் மறு பயன்பாடுள்ள பொருட்கள் இருக்கும் இடம் மற்றும் அவற்  றின் அளவு குறித்து பொது மக்களும், மறுசுழற்சி யாளர்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இணையதள சேவையை ஆணையாளர் கோ.பிரகாஷ் வெள்ளியன்று (டிச. 13) சென்  னையில் துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாந கராட்சியில் தினந்தோறும் உற்பத்தியாகும்  மொத்த கழிவு களில் 50 விழுக்காடு அதாவது  சுமார் 2,610 மெட்ரிக் டன் ஈரக்  கழிவுகளாகும்.இவற்றில்  1.083 மெட்ரிக் டன்  கழிவுகள்  மறுசுழற்சி செய்யப்படு கின்றன. மாநகராட்சியில் சேக ரிக்கப்படும்  மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகள் போன்ற உலர் கழிவுகளை தின மும் 400 மெட்ரிக் டன் அள விற்கு கையாளுவதற்கு தனி யர் மற்றும் பொது பங்களிப்பா ளர் மூலம் பணிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்  கப்பட்டுள்ளது.  மாநக ராட்சியில் தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகளை 64 வன  மீட்பு மையங்கள், 10  பொருட்கள் மீட்பு மையங் கள் ஆகியவற்றின் வாயி லாக பிரித்து, மறுசுழற்சி யாளர்களிடம் வழங்கப்படு கிறது. மீதமுள்ள உலர் கழிவுகள் எரியூட்டும் நிலையம் மூலம் பைராலிஸ் முறையில் கையாளப்பட்டு, அவை சிமெண்ட் ஆலைக்கான எரி  பொருளாக பயன்படுத்தப் படுகிறது. தற்பொழுது மாநக ராட்சி, மணலி மண்டலத்தில் புதிதாக எரியூட்டும் மையம் நிறுவப்பட்டு நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் பைராலிஸ் முறையில் மறுசுழற்சி செய்  யப்பட்டு வருகிறது. மேலும்,  நாளொன்றுக்கு 300 மெட்ரிக்  டன் அளவிற்கு உலர் கழிவு களை கையாள நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள் ளது. பொதுமக்கள் மற்றும் மறு சுழற்சியாளர்கள் www.madraswasteexchange.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் சார்பில் தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகள் மற்றும் திடக்கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மறுபயன்பாடுள்ள பொருட் களை இத்தளத்தின் வழியே வாங்கவும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள உலர் கழிவு களை விற்கவும் இந்த இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) பி.  மதுசுதன் ரெட்டி, தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மோகன், மேற்பார்வை பொறியாளர் வீரப்பன் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.