tamilnadu

வாகனங்களை மீட்க காத்துகிடக்கும் வாகன ஓட்டிகள்

 சென்னை, மே 7- ஊரடங்கை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட வாக னங்களை பெற அதன் உரிமையாளர்கள் காத்துக்கிடக்கின்ற னர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4 லட்சத்து  7 ஆயிரத்து 891 வழக்குகள் பதியப்பட்டு, 4 லட்சத்து 32 ஆயி ரத்து 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3 லட்சத்து 59 ஆயிரத்து 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்  பட்டுள்ளன. அபராதமாக 4 கோடியே 46 லட்சத்து 89 ஆயிரம்  ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர எல்லைக்குள் (மே 6 - 7 தேதி களில்) 306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 இருசக்கர வாக னங்கள், 75 ஆட்டோக்கள் மற்றும் 8 இலகு ரக வாகனங்கள் என 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து பறி முதல் செய்யப்பட்ட வாகனங்களை திருமப ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாளொன்றுக்கு 40 வாகனங்கள் வீதம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. வாகனத்தின் அசல் ஆவணங்களை சமர்ப்பித்து, ஊர டங்கை மதிப்பதாக உறுதிமொழி விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்ட பிறகே வாகனங்கள் திருப்பி தரப்படுகிறது. இதனால் வாகனங்களை திரும்ப பெற உரிமையாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.