tamilnadu

img

மோட்டார் வாகன சாலை வரியை ரத்து செய்க!

சென்னை, நவ. 24- நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட மோட்டார் வாகன சாலை வரியை ரத்து  செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனம் சார்பில் மாநிலம் முழுவதும் வெள்ளியன்று (நவ. 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னை  பெருநகர மோட்டார் வாகன தொழி லாளர்கள் சங்கம் வடசென்னை மாவட் டம் சார்பில் கொளத்தூர் இரட்டை ஏரி ஆர்டிஓ (வடக்கு) அலுவலகம் அருகே  துணைத் தலைவர் பி.என்.உண்ணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, மோட்டார் வாகன சங்க துணைப் பொதுச் செயலாளர் ஏ.ராயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வெற்றி (உழைக்கும் கரங்கள்), சாமி (பாஸ்டேக்), இந்திரன் (சுற்றுலா வாகன உரிமையாளர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து வி.குப்புசாமி கூறு கையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட கடுமையான தொழில் பாதிப்பு இன்னும் சரியாகாத நிலையில், ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019 என்ற பெயரில் மோட்டார் தொழிலை அழிக்க பல்வேறு உத்தர வுகளை தினசரி அறிவித்து வருகிறது. ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை டோல்கேட் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, ஆன்லைன் மூலம் அபராதம் என தொழி லையும், தொழிலாளர்களையும் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த 7ஆம் தேதி தமிழ்நாட்டில் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரியை புதிய வாகனங்களுக்கு பல மடங்கு உயர்த்தியும், பழைய மேக்ஸி  கேப் வாகனங்களின் இருக்கைக்கு ஏற்ப காலாண்டு வரியை உயர்த்தியும், அதையும் ஆயுள் வரியாக செலுத்த வேண்டும் என்றும், பழைய, சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கு காலாண்டு வரியை பல மடங்கு உயர்த்தியும் உத்தரவு வெளியிட்டு அதை உடனடியாக அமல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை போக்கு வரத்து தொழிலுக்கு  பெரும் ஆபத்து ஆகும்.புதிய வாகனம் வாங்க இயலாத, ஓரிரு பழைய வாகனங்களை வைத்து அதன் மூலம் வரும் வருமா னத்தில் தனது குடும்பத்தின் உணவு, கல்வி, மருத்துவம், வீட்டு வாடகை, மின் கட்டணம் என தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடி யாமல் திணறி வரும் தொழிலாளர் களை இந்த அறிவிப்பு தொழிலை விட்டு வெளியேற வைக்கும் நிலைக்கு தள்ளிவிடும்.

எனவே தமிழ்நாடு அரசு அறி வித்துள்ள அனைத்து வாகனங் களுக்கான சாலை வரி உயர்வை உடன டியாக வாபஸ் பெற வேண்டும். பழைய மேக்சி கேப் வாகனங்க ளுக்கான சாலை வரியை காலாண்டு வரி செலுத்தும் முறையே தொடர நட வடிக்கை எடுக்க வேண்டும். அக்ரி கேட்டர் விதிகளை உடனடியாக வகுக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், ஆர்டிஓ காவல் துறை மாமூலை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி மாநிலம் முழுவதும் உள்ள மோட்டார்  தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தையும் காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.