tamilnadu

img

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடியை தடுக்க மாதர்சங்கம் கோரிக்கை

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடியை தடுக்க  மாதர்சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, மே 16- நுண் நிதி நிறுவனங்களின் அடா வடியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உழவர்கரை மாதர் சங்க மாநாடு வலி யுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உழவர்கரை நகர 14வது மாநாடு புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு  அன்பரசி ஜூலியட் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். உழவர் கரை நகர செயலாளர் முனியம்மாள் வேலை அறிக்கையை சமர்பித்தார்.  மாநில செயலாளர் இளவரசி, துணைத் தலைவர் சத்யா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பகுதி தலைவர் தெய்வசிகாமணி, வாலிபர் சங்க செயலாளர் நிலவழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். அதிகரித்து வரும் சமூக குற்றங்களை தடுக்க  ரெஸ்ட்ரோபார்களை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் தேர்வு

 11 பேர் கொண்ட உழவர்கரை நகர  கமிட்டியின் தலைவராக அன்பரசி ஜூலியட் செயலாளராக தாரா, பொரு ளாளராக கோமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.