tamilnadu

img

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து - ஏ.கே.ராஜன்

பெரும்பாலானோர் நீட் வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்று நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவன் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயத் தமிழக அரசால் கடந்த 10 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தமிழகத்தில், நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது. 

அதன்படி இந்த குழு கடந்த ஒரு மாதங்களாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் பலகட்டமாக ஆலோசனை மேற்கொண்டு ஆய்வறிக்கையை ஒன்றைத் தயாரித்தனர். அந்த ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்த பின் நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது பற்றி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வு திருப்தியாக இருந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் கருத்து தெரிவித்து இருக்கின்றன. நீட் தேர்வு வேண்டாம் என்றே பெரும்பாலானோர் எங்களிடம் கருத்து தெரிவித்தனர். எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வு அறிக்கையில் முன்வைக்கவில்லை. ஆய்வு திருப்தியாக இருந்தது. இது வாக்கெடுப்பு அல்ல, பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். 

;