புதுச்சேரியிலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு காரைக்கால் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமம் அருகே சாலையின் ஓரத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அண்ணா மலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.