சென்னை, ஆக. 22 - தமிழ்நாடு முழுவதும் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு களில் மட்டும், குழந்தை திருமணங் கள் குறித்து 13 ஆயிரத்து 665 புகார்கள் வந்ததாகவும், இதில் பத்தாயி ரத்துக்கும் அதிகமான குழந்தை திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்ப தாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதற்கு, ஆண்களுக்கு 21 வயதும், பெண் களுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும் என்பது சட்டம். மீறினால், அவை குழந்தை திருமணங்களாக கருதப்படும். சட்டப்படியும் குற்றம்.
எனவே, இந்தச் சட்டமானது, குழந்தை திருமணங்களை தடுப்பது மட்டுமின்றி, சிறார்களுக்கு பாது காப்பையும் நிவாரணங்களையும் வழங்குகிறது. குழந்தை திருமணங்களுக்கு உடந்தையாக இருப்போருக்கு அபராதமும், தண்ட னையும் விதிக்கிறது. எனினும், இன்றும் குழந்தை திருமணங்கள் தொடரத்தான் செய்கிறது.
இந்நிலையில், குழந்தைத் திரு மணம் குறித்து பல்வேறு தகவல்கள் மருதுபாண்டி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் முன்வைத்து, பதிலைப் பெற்றுள்ளார்.
அதில், தமிழ்நாடு முழுவதும் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை, குழந்தைத் திருமணங்கள் குறித்து 13 ஆயிரத்து 665 புகார்கள் வந்ததாகவும், அதன் அடிப்படையில், 10 ஆயிரத்து 551 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
“தமிழ்நாட்டில், குழந்தைத் திரு மணங்கள் பற்றி அதிகபட்ச புகார்கள் வந்த மாவட்டங்களின் பட்டியலில், தேனி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டு களில் 872 புகார்கள் வந்துள்ளன. 784 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் 862 புகார்கள் பெறப்பட்டு, 685 குழந்தைத் திரு மணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சேலத்தில் 838 புகார்கள் பெறப்பட்டு, 713 குழந்தை திருமணங்கள் தடுக்கப் பட்டுள்ளன. நாமக்கல்லில் பெறப்பட்ட 774 புகார்களில் 425 குழந்தைத் திரு மணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற 632 புகார்களில், 510 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப் பட்டுள்ளன. மேலும், 3 ஆயிரத்து 114 குழந்தை திருமணங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்த போது, அதற் கான எந்த ஆதாரங்களும் கிடைக்க வில்லை” என ஆர்டிஐ தகவலில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வறுமை, விழிப்புணர்வு இன்மை, திருமணத்தின் மூலம் சொந்தங்களை உறுதிபடுத்துவது, வயது முதிர்ந்தோர் கடைசி ஆசை யை நிறைவேற்றுவதாக கருதுவது என்பன உள்ளிட்டவையே, குழந்தைத் திருமணங்களுக்கு காரணமாகிறது.
குழந்தை திருமணங்களால், பிரசவ மரணங்கள், கருக்கலைப்புகள், ஆரோக்கியமற்ற நிலை உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் ஏற்படும். புரித லான உறவுகள் இருக்காது, குடும்ப வன்முறைகளும் தற்கொலை முயற்சி களும் பெருகும், கல்வியறிவற்ற சந்ததிகள் உருவாகும் என்று மருத்து வர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே தான், மாவட்ட சமூக நல அலுவலரை, குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரியாக நியமித்து,. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், அவற்றை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாது காக்கவும் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் குழந்தைத் திரு மணங்களை தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான மத்திய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.