tamilnadu

மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்

மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும்  முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்

வணிகர் பேரவை அரசுக்கு கோரிக்கை

சென்னை, மே 6- மாதம்தோறும் மின் கட்ட ணம் செலுத்தும் முறையை நடை முறைப்படுத்த வேண்டும் என வணிகர் பேரவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 42ஆவது வணிகர் தின விழா “சில்லரை வணிகம் சுதேசி தொழில்கள் காக்கும் பிரகடன மாநாடு” காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை யில் த.வெள்ளையன் நினை வரங்கில் தலைவர் எஸ்.சவுந்தர் ராஜன் தலைமை திங்களன்று (மே 5) நடைபெற்றது.  தீர்மானங்கள் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி பதிவு மற்றும் உரிமம் குறிப்பிட்ட ஆண்டிற்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையை ரத்து செய்து, பொருள் மற்றும் சேவை வரி சட்டம் போன்று ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உரிமம் பெற்றால் போதும் என்ற வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூ.2.37 லட்சம் கோடியை எட்டிய நிலையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை சேவை வரி சட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும். கடை நிறுவன சட்டத்தின்படி தற்காலிக மற்றும் பயிற்சி பெறும் பணி யாளர்களுக்கு பதிவேடு பராமரித்தல், குறைந்தபட்ச ஊதியம் வழங்கு தல் போன்றவைகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும். பீக்ஹவர் கட்டணம், பவர் ஃபேக்டர் கட்டணங்கள் ரத்து செய்ய வேண்டும். மாதாமாதம் மின் கட்ட ணம் செலுத்தும் முறையை நடை முறைப்படுத்த வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்க சாவடிகள் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்தால் அங்கு சுங்கசாவடி கட்டணத்தை முழுமையாக நீக்கவேண்டும். குறைந்தது 100 கி.மீ. தூரத்திற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும், மற்ற சுங்கச்சாவடிகள் அனைத்தை யும் நீக்க வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வங்கி சேமிப்பு கணக்கில் ஒரு ஆண்டிற்கு பரிவர்த்தனை ரூ.10 லட்சம் மிகும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் வங்கி கணக்கில் நடைபெற்ற ஒவ்வொரு பரிவர்த்த னைக்கும் விளக்கம் அளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் செயல் சிறு வணிகர்களை கடுமை யாக பாதிக்கிறது. எனவே வங்கி கணக்கில் ஆண்டு ஒன்றுக்கு பரி வர்த்தனை ரூ. 50 லட்சத்தை மிகும் பட்சத்தில் மட்டும் ஒவ்வொரு பரி வர்த்தனைக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். வணிக நிறுவனங்கள், உரிமை யாளர்கள், ஊழியர்கள் மீது தாக்கு தல் நடத்துதுல், தகாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.