tamilnadu

img

‘மோடி ஆட்சி - இருண்ட காலத்தின் சாட்சி’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எழுதிய ‘மோடி ஆட்சி - இருண்ட காலத்தின்  சாட்சி’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (பிப்.27) தி.நகரில் நடைபெற்றது. பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூலை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக வர்த்தகர் அணி செயலாளர்  காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன்,  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.