அஜய் பாசுதேவ் என்ற சமூக ஆர்வலர் கடந்த 10 ஆண்டு களில் தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளம், எஸ்எம்எஸ், டிஜிட்டல் உள்ளிட்டவைகளில் விளம்பரங்கள் கொடுக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய நிதி குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மிகவும் தாமதமாக பதில் அளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், “2014 முதல் இணையதளம், எஸ்எம்எஸ், டிஜிட் டல் விளம்பரங்களுக்கு மட்டும் ரூ. 667.38 கோடி அரசு செலவிட்டுள் ளது. இதில் அதிகபட்சமாக 2015- 2016இல் ரூ.126 கோடி செலவிடப் பட்டது. 2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங் களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக 2016-17 காலகட்டத் தில் தொலைக்காட்சி விளம்பரங்க ளுக்காக மட்டும் ரூ.519 கோடி அரசு செலவிட்டுள்ளது” என கூறியுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு தனது சொந்த அர சியல் நலனுக்காக தொலைக்காட்சி, சமூகவலைதள விளம்பரங்க ளுக்கு ரூ.3,641 கோடி அளவிலான மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்ட னம் தெரிவித்த நிலையில், வழக்கம் போல மோடி அரசு இதைப்பற்றி எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறது.
மறைக்கும் மோடி அரசு
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்த மொத்த விளம்பரங்க ளின் நிதி ஆதாரத்தை அஜய் பாசு தேவ் கேட்டு இருந்தார். ஆனால் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் குறித்து மட்டுமே மோடி அரசு பதில் அளித்துள் ளது. ஆயினும், பத்திரிகை விளம் பரங்கள், பொது இடங்களில் வைக் கப்பட்ட பேனர் உள்ளிட்டவை களுக்கு செலவு செய்த தகவல் குறித்து வாய் திறக்கவில்லை. மேலும் டிஜிட்டல், போஸ்டர், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு மோடி அரசு செலவிட்ட தொகை விவரமும் தெரி விக்கப்படவில்லை என்பதால், மோடி அரசின் 10 ஆண்டுகால விளம்பர செலவு மட்டும் ரூ.7000 கோடியை தாண்டலாம் என தக வல் வெளியாகியுள்ளது.