சென்னை, ஆக.16- தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது.சென்னை, ஆக.16- தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மாற்றாந் தாய் மனப்பான்மையோடு நடத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.16) சென்னை ராயப் பேட்டையில் உள்ள தலைமை அலுவல கத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்க மணி, டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
எடப்பாடி பழனிசாமி வகுத்துத் தரு கின்ற தேர்தல் வியூகப்படி உள்ளாட்சித் தேர்தலையும், 2026 சட்டப்பேரவைத் தேர் தலையும் அதிமுக சந்திக்கும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
“தமிழக மீனவர்கள் மீதான தாக்கு தல்கள், உயிரிழப்புகளை கண்டும் காணா மல் இருந்து வரும் ஒன்றிய அரசை வன்மை யாக கண்டிக்கிறோம்; 2024-25ஆம் ஆண்டி ற்கான ஒன்றிய பட்ஜெட்டில், தமிழகத்தி ற்கு எந்த விதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத் தை அளிக்கிறது; கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், அறிவிக்கப்பட்ட பாது காப்பு தளவாடங்கள், தொழில் வழித் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், வெள்ளத் தடுப்பு போன்றவற்றுக்கு நிதி அறிவிக்கப்படுவதில் இருந்து தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது; தமிழ்நாட்டி ற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்க ப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு இருக்கும் காழ்ப்புண ர்ச்சியை காட்டுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
வரலாறு காணாத வயநாடு பேரிட ரை தேசியப் பேரிடராக அறிவித்து, தேவை யான அனைத்து நிதி உதவி மற்றும் நிவா ரண உதவிகள் ஒன்றிய அரசு காலதாமத மின்றி வழங்க முன்வர வேண்டும்; மருத்து வக் காப்பீடு பிரீமியத்துக்கு தற்போது வசூலிக்கப்படும் 18 விழுக்காடு வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.