மோடி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத பாஜகவினர் மீது அரசு எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியப்பிரதமர் மோடியின் பிறந்த நாள் இன்று பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் இன்று பாஜக தொண்டர்கள் மோடியின் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடினர். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் திறப்பு விழாவின் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை, அதிக அளவில் கூட்டம் கூடியது, கொரோனா பரப்பும் சூழ்நிலையை உருவாக்க காரணமாக அமைந்தது உள்ளிட்ட நோய் தொற்று தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.