tamilnadu

img

முதுபெரும் தலைவர் லட்சுமணன் மறைவிற்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு இரங்கல்

லட்சுமணன் மறைவையடுத்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ். நூர் முகமது பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெயிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணை தலைவர் டி.இலட்சுமணன் 24.8.2020  நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினை உருவாக்கிய ஸ்தாபக தலைவர்களில் இலட்சுமணன் மிக முக்கியமானவர். சிறுபான்மை மக்கள் பிரச்சனைகளில்  மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் மதச்சார்பின்மையில் மிகவும் அழுத்தமான உறுதி கொண்டவர். சிறுபான்மை மக்கள் நலக்குழுவை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல மாவட்டங்கள் தோறும் அலைந்து திரிந்து பணியாற்றியவர். உரிமை மறுக்கப்பட்ட  சிறுபான்மை மக்களின் ஒற்றுமையை கட்டியமைக்கவும் சிறுபான்மை மக்களுக்கு உரிய நீதி கிடைக்க போராட்டங்களை உருவாக்கவும் தமது பெரும் உழைப்பை செலுத்தியவர். 
சிறுபான்மை நலக்குழு மாற்றுத் திறனாளிகள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழகத்தில் உருவாக முன் முயற்சி எடுத்தவர். மார்க்சிய சித்தாந்த பார்வையோடு சமூக பிரச்சனைகளை அனுகியவர். தோழர்களை, ஊழியர்களை பயிற்றுவிப்பதில் தம் பொதுவாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டவர். அவரது இழப்பு தமிழகத்தின் தொழிலாளி வர்க்கத்திற்கும் மத சார்பின்மை போற்றுகிறவருக்கும், ஜனநாயக உள்ளம் கொண்டோருக்கும்  ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும் அவரது மறைவால் வருந்தும் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெவித்துக் கொள்கிறது.