சிறுபான்மை மக்கள் நலக்குழு பேரவைக் கூட்டம்
கோவை, ஜூலை 14- சிறுபான்மை மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத் திடுக உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பேரவைக் கூட்டம் கோவையில் சனியன்று நடைபெற்றது.
சிறுபான்மை மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத் தக் கோரியும், சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கி வரும் இட ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை மாவட்டம், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு பேரவைக் கூட்டம் ரத்தினபுரி மினி ஹாலில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறு பான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஏ. சாதிக் பாச்சா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெரோம் ரோட்ரிக்ஸ், கன்வீனர் என்.ஆர்.முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில், அரவ ணைக்கும் கரங்கள் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு சீரு டைகள் வழங்கினர் இதில், மாநில, மாவட்டத் தலை வர்கள், இரத்தினபுரி நிர்வாகிகள் மற்றும் சிறுபான்மை நலக்குழு உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டனர். முடிவில், ஜெய்மேனன்யல் நன்றி கூறி னார்.
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி பிரச்சாரம்
நாமக்கல், ஜூலை 14- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் மாண வர் கழகம் சார்பில் துவக்கப்பட்ட இருசக்கர வாகன பிரச் சாரம் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தடைந்தது
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி திரா விட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட் டம் பள்ளிபாளையத்திற்கு பிரச்சாரப் பயணம் வாகனம் வந்தடைந்தது. ஆவரங்காடு பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நீட் தேர் வினால் தமிழக மாணவர்கள் படும் இன்னல்கள் குறித் தும்,ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கை குறித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றவர்கள் உரையாற்றினர் .தொடர்ந்து பிரச்சாரப் பயணம் நாமக் கல் நகருக்கு சென்றது. ஜூலை 15ஆம் தேதி (இன்று) சேலத்தில் இந்த வாகனப் பிரச்சார இயக்கம் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை
இதைபோன்று, மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு திராவிட மாணவர் பேரவையி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
உலக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம்
பொள்ளாச்சி, ஜூலை 14- இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக பிளாஸ் டிக் அறுவை சிகிச்சை தினம் பொள்ளாச்சியில் கொண் டாடப்பட்டது.
உலக ஒட்டுறுப்பு தினத்தை முன்னிட்டு ஒட்டுருப்பு அறுவை சிகிச்சையில் தற்போது என்னென்ன மாற்றங் கள் நடைபெற்றுள்ளது. என்பதனை எடுத்து சொல்லும் நோக்கத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஐஎம்ஏ ஹாலில் சனியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நி கழ்ச்சியில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை சார்ந்த மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த நூல்கள் கண்காட்சி ஸ்டால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தது. ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தின கருத்தரங்கில் 50 மருத்துவர்கள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை சம்பந்த மான செயற்கை பயிற்சி எடுத்து கொண்டனர். இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலை வர் அப்துல் ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் மூலம் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முன்னேற்றங்கள் பற்றி மருத்துவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது, என்றார்.
தீயணைப்புத் துறையில் தன்னார்வலர்கள் பயிற்சி
ஈரோடு, ஜூலை 14- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில், 11 தீயணைப்பு நிலைய பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் தீய ணைப்புத் துறையினரோடு இணைந்து பணியாற்று வது குறித்து பயிற்சி சனியன்று அளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிக ளில் தீயணைப்பு மற்றும் பேரிடர் காலங்களில், மீட்புப் பணிகள் உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெள்ள அபாய ஒத் திகை பயிற்சிகளும், தீத்தன்னார்வலர்களுக்கு மாதந் தோறும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் படி, சனியன்று, 11 தீயணைப்பு நிலையங்களின் அரு காமையில் உள்ள தன்னார்வலர்கள் 40 நபர்களுக்கு பேரிடர் காலங்களான வெள்ளம், பெருந்தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ உள்ளிட்ட சூழ்நிலை ஏற்ப டும் பொழுது தீயணைப்புத் துறையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல்: கண்டனம்
தருமபுரி, ஜூலை 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாரகம் ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என கட்சியின் மாவட்டச் செயலா ளர் அ.குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பென்னாகரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.சக்திவேல், சனியன்று மாலை 6 மணியளவில் பென் னாகரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த கஞ்சா வியாபாரத் தில் ஈடுபடும் சமூக விரோத சக்திகள் சிலர், ஜி.சக்திவேலை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காய மடைந்த அவர் பென்னாகரம் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகி றார். தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோ திகள் மூன்று பேரைக் காவல் துறையி னர் கைது செய்துள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளுக்காக வும் தொடர்ந்து குரல் கொடுத்து வரக்கூ டிய, பொது வாழ்வு பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதா ரண பொதுமக்களுக்கு பாதுகாப்பு எங்கே? என்ற கேள்வி எழுகிறது. அதிக ரித்து வரும் சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராய வியா பாரத்தில் ஈடுபட்டு வரும் சமூக விரோதி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறை முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
தருமபுரி, ஜூலை 14- தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்க ளுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி நகரப் பகுதியில் போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரு கின்றனர். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீ பன் ஜோசுபாதம் அறிவுறுத்தலின்படி, தருமபுரி நகரப் பகுதி யில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டடு வருகிறது. இந்நிலை யில், ஞாயிறன்று போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத் தம் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகன ஓட்டிகளி டமிருந்து ரூ.1.40 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.