சென்னை, ஆக. 21 - உலகம் முழுவதும் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொற்று நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, குரங்கம்மை தொற்று நோயை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் குரங்கம்மை நோய்த் தடுப்பு கண் காணிப்பு பணியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூடுதல் தலைமைச் செய லாளர் சுப்ரியா சாகு ஆகியோர் புதனன்று (ஆக.21) நேரில் ஆய்வு செய்தனர்.