சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வென்ற 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.