tamilnadu

முகக்கவசம் அணிவது அவசியம் : அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள்

சென்னை, டிச. 30 - “கொரோனா வைரஸ் பல்வேறு உரு மாற்றங்கள் பெற்று தற்போது ஜே என்.1 என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி யுள்ளது. இந்த வைரஸ் பொதுவாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தேவை ஏற்படாத வகையில் மிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே பொது மக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.எனினும், இணை நோய், நுரையீரல் பாதிப்பு, இதய நோய் பாதிப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பு,  உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு கள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், சோப்புப் போட்டு கைகளை கழுவ வேண்டும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் அறிவுறுத்தியுள்ளார்.