tamilnadu

img

நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் கையிருப்பில் உள்ளது! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சென்னை, ஜூன் 8- நடப்புப் பருவத்திற்கு தேவையான உரம் கையி ருப்பில் உள்ளது என்று அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய் திக்குறிப்பு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விவ சாயிகள் பயன்பெறும் வகை யில் ஒவ்வொரு பருவத்தி லும் கூட்டுறவுத் துறையின் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண்மைப் பணி களுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வேளாண்மைத் துறையுடன் ஒருங்கிணைந்து உழவர் பெருமக்களுக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்  டில் தென்மேற்குப் பருவ மழையின் காரணமாக ஏப்ரல்  முதல் செப்டம்பர் வரை உள்ள நடப்பு காரீப் பரு வத்தில் வேளாண்மைப் பணி களுக்குத் தேவையான உரம் மற்றும் இடுபொருட் களைப் பொறுத்தவரை யூரியா 30 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலும், டி.ஏ.பி 15 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலும், எம்.ஓ.பி 9 ஆயிரத்து 200  மெட்ரிக் டன் என்ற அளவி லும், காம்ப்ளக்ஸ் 21 ஆயி ரத்து 600 மெட்ரிக் டன் என்ற  அளவிலும் ஆக மொத்தம்  75 ஆயிரத்து 800 மெட்ரிக்  டன் உரம் தொடக்க வேளா ண்மைக் கூட்டுறவு கடன் சங்  கங்களில் இருப்பாக வைக் கப்பட்டுள்ளது.

மேலும், உடனடித் தேவையை எதிர்கொள்ளும் வகையில், டான்பெட் இருப் புக் கிட்டங்கிகளில் (Buffer Godowns) யூரியா 4 ஆயி ரத்து 500 மெட்ரிக் டன் என்ற  அளவிலும், டி.ஏ.பி 2 ஆயி ரத்து 700 மெட்ரிக் டன் என்ற  அளவிலும், எம்.ஓ.பி 3 ஆயி ரத்து 700 மெட்ரிக் டன் என்ற அளவிலும், காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 400 மெட்ரிக் டன்  என்ற அளவிலும் ஆக மொத்  தம் 16 ஆயிரத்து 300 மெட்ரிக்  டன்கள் இருப்பாக வைக்கப்  பட்டுள்ளது.

இதுதவிர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயிர்க்  கடன் பெற்று பயிர்களை  விளைவித்து பயன்பெறு மாறு கேட்டுக்கொள்கி றேன்” என்று குறிப்பிட்டுள் ளார்.