tamilnadu

img

பள்ளிகளில் இணையதள கட்டணம் நிலுவையில் இல்லை அமைச்சர் அன்பில் மகேஷ் மறுப்பு

சென்னை,டிச.22- 3,700 அரசு பள்ளிகளில் இணையதள  இணைப்புக்கட்டணம் நிலுவையில் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 3,700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிஎஸ்என்எல்-இன் பிராட்பேண்ட் சேவை பாரத் ஃபைபர் (எஃப் டிடிஎச்) இணைப்பு வழங்கப்பட்டது. சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளுக்கான கட்டணத்தை பள்ளிகள் முறையாகச் செலுத்தவில்லை என்று இணைய தளத்தில் செய்திகள் உலா வந்தது.

 இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,, தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுரை ரூ. 2.151 கோடியை ஒன்றிய அரசு  பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்காமல் உள்ளது. ஆனால், மாநில நிதியிலிருந்து ஆசிரியர்களின் ஊதியம் முதல் கட்டணங்கள் வரை அனைத்தையும் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.