tamilnadu

மேட்டுத்தெரு வடிகால்வாய் பணி மே மாதத்தில் நிறைவடையும்

மேட்டுத்தெரு வடிகால்வாய் பணி மே மாதத்தில் நிறைவடையும்

ஆர்.ஜெயராமன் கேள்விக்கு  மேயர் பதில்

சென்னை, ஏப். 30 - மேட்டுத்தெருவில் நடைபெற்று வரும் வடிகால்வாய் அமைக்கும் பணி மே மாதத்தில் நிறைவுறும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் புதனன்று (ஏப்.30) ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர்.பிரியா தலை மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் பேசிய சிபிஎம் 4வது வார்டு உறுப்பி னர் ஆர்.ஜெயராமன், “எரி உலை தொடர்பாக சந்தேகம் எழுப்பினோம். இதனையடுத்து மேயர், உறுப்பி னர்களை ஹைதராபாத் அழைத்து சென்று நேரில் விளக்கமளிக்கப்பட்டது. மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி சரி செய்யும் வகையில் செயல்பட்டது பாராட்டுக்குரியது” என்றார். எர்ணாவூர் துவக்கப்பள்ளியில் ரூ. 9.13 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி கேள்வி எழுப்பிய அவர், “4வது வார்டில் சிப்பம் 38ல் ஒப்பந்தம் விடப்பட்டு மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரிடம் போதிய ஆட்கள் இல்லை. உட்புறச் சாலைகளில் பணிகளை சரிவர செய்வதில்லை. கடந்த மழையின்போது மேட்டு சாலையில் வெள்ளம் தேங்கி நின்றது. அப்போது வடக்கு வட்டார ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க கோரி அறிவுறுத்தினர். இருப்பினும் இன்றுவரை பணிகள் முடிக்கப்படவில்லை. எனவே, ஒப்பந்ததரார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மேயர், ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வடிகால்வாய் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வரு கிறது. 152 மீட்டர் பணிகள் நடந்து வரு கிறது. இந்தப் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் கால்வாய் அமைக்கும் போது பாதிக்கப்பட்ட 4 வீடுகளுக்கு முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.