வேலூர், அக்.13- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஒ), தென்னிந்திய தோல் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள நிறுவனங்கள் மற்றும் பி.எப் ஊழியர்களு க்காக ‘நிதி ஆப்கே நிகாட்’ (உங்களுக்கு அருகில் பி.எப்.) என்ற குறைதீர் நாள் முகாம் ராணிடெக் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் பி.எப். சேவை அமைப்பை மேம்படுத்துவதில் உள்ள குறைகள் அல்லது பரிந்துரைகள், சந்தாதாரர்கள், முதலாளிகள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, தங்களது பி.எப். குறியீடு எண் மற்றும் கணக்கு எண் பராமரிப்பது பி.எப் சேவை பெறுவதிலுள்ள குறைகளை ஆன்லைன் மூலம் நிவர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முறை குறித்து ஒளி வீச்சு மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த குறை தீர்வு முகாமில் வேலூர் பிராந்திய வருங்கால வைப்பு நிதி துணை ஆணையர் ஆ.கணேசன் தலைமை வகித்து உரையாற்றினார். தென்னிந்திய தோல் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கச் செயலாளர் சி.எம். ஜபருல்லா வரவேற்றார்.அமலாக்க அதிகாரி (இபிஎப்ஓ) டி. கிரேஸ் அனிதாநவராணி, கணக்கு அலுவலர் வி. கார்த்திகேயன், இயக்குநர் கே. முபீன் பாஷா, ராணிடெக் பொதுமேலாளர் டி. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.