சென்னை, ஜூலை 23- “வணிகர்கள் கடைக ளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க தாமாகவே முன் வர வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார் பில் நாட்டிலேயே முதல் முறையாக, வணிகர்கள் நல னுக்காக வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள் ளது. முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையில் இந்த வாரி யத்தின் முதல் கூட்டம் தலை மைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாரியத தின் துணைத் தலைவரான அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரித்துறை செயலாளர், வணிக வரித்துறை ஆணை யர், நிதித்துறை செயலாளர், தொழிலாளர் நலத்துறை செயலர் மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்களைச் சேர்ந்த வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முதல் வர் ஸ்டாலின் பேசுகையில், “தற்போது வரை நலவாரி யத்தில் 88,210 பேர் உறுப்பி னர்களாக சேர்ந்துள்ளனர். அடுத்த வாரிய கூட்டத்துக் குள் இந்த வாரியத்தின் உறுப் பினர் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும்” என்றார்.
கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல நிதியும் உயர்த்தப் பட்டு 390 குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பொறுப்பேற்றது முதல் 8883 வணிகர்கள் பல்வேறு நிதி உதவிகள் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
வருங்காலத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்ய தயாராக உள் ளோம். சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் கடை களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி களில் 9 ஆண்டுகள் இருந் ததை 12 ஆண்டுகள் என விதி கள் திருத்தப்பட்டுள்ளது. வணிகர்கள் நீங்களே முன் வந்து தமிழில் பெயர் பலகை களை மாற்ற முன்வர வேண் டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.